மோட்டார் சைக்கிள் பந்தயம்: சென்னை வீரர்கள் சாம்பியன்

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், சென்னை வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

Update: 2019-03-03 21:47 GMT

சென்னை,

சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நேற்று நடந்தது. இதில் ஹோண்டா சி.பி.ஆர்.250 பிரிவில் சென்னை ஜோடியான அரவிந்த் பாலசுப்பிரமணியம், கெவின் கண்ணா ஆகியோர் வெற்றி பெற்றனர். அபிஷேக்- அனிஷ் ஷெட்டி இணை 2-வது இடத்தை பிடித்தது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் அரவிந்த்-கெவின் கூட்டணி வசப்படுத்தியது.

மேலும் செய்திகள்