பிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை: இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு தங்கம்

பிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் ஷிவ தபா தங்கம் வென்றார்.

Update: 2019-07-20 23:07 GMT
கஜகஸ்தான்,

பிரசிடன்ட் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஷிப தபா, கஜகஸ்தான் வீரர் ஜாகிர் சபியுலினுடன் நேற்று மோதுவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக ஜாகிர் விலகினார். இதனால் விளையாடாமலேயே ஷிவ தபா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்