உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: மானு-சவுரப் ஜோடிக்கு தங்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், மானு-சவுரப் ஜோடி தங்கம் வென்றது. மேலும் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது.

Update: 2019-09-03 23:56 GMT
ரியோ டி ஜெனீரோ,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்போட்டி பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று முன்தினம் நடந்த கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மானு பாகெர்- சவுரப் சவுத்ரி ஜோடி சக நாட்டவர்களான யாஷ்அஸ்வினி சிங் - அபிஷேக் வர்மா இணையை 17-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. தோல்வி அடைந்த யாஷ்அஸ்வினி- அபிஷேக் வர்மா ஜோடி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று 9 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து வியக்க வைத்துள்ளது. மற்ற நாடுகள் ஒரு தங்கப்பதக்கத்துக்கு மேல் வெல்லவில்லை. சீனா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது.

மேலும் செய்திகள்