உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

Update: 2019-09-16 23:31 GMT
நுர் சுல்தான்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ககஜஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் பிரிவில் 77 கிலோ உடல் எடைப்பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் குர்பிரீத் சிங் 1-3 என்ற புள்ளி கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள செர்பியாவின் விக்டோர் நெம்சிடம் போராடி வீழ்ந்தார். 60 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் மனிஷ் 0-10 என்ற புள்ளி கணக்கில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள மால்டோவா வீரர் விக்டர் சிபானுவிடம் தோல்வி கண்டார். 130 கிலோ எடைப்பிரிவில் தகுதி சுற்றில் இந்திய வீரர் நவீன், பான் அமெரிக்கன் சாம்பியன் ஆஸ்கார் பினோ ஹின்ட்சை (கியூபா)சந்தித்தார். இதில் நவீன் 0-9 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார். அவரை வீழ்த்திய ஆஸ்கார் பினோ ஹின்ட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் வெண்கலப்பதக்கம் வரை முன்னேற வாய்ப்புள்ள ரிபிசேஜ் பிரிவில் நவீனுக்கு மற்றொரு வாய்ப்பு கிட்டியது.

மேலும் செய்திகள்