தேசிய ஓபன் தடகளம்: தமிழக அணியில் 36 வீரர்-வீராங்கனைகள்

59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.

Update: 2019-10-04 22:52 GMT
சென்னை, 

59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் 19 வீரர்களும், 17 வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர். தமிழக அணி வருமாறு:-

ஆண்கள் அணி: கதிரவன், விக்னேஷ் அண்ணாமலை, தருண், சுரேந்தர் செல்வமணி, ஜெர்ரிடான் சூரி காமராஜ், முஜாமில், ஜீவா சரண், சுரேந்தர், வீரமணி, ராமச்சந்திரன், வினித், முகமது சலாலுதீன், டேனியல் ராஜ், சுவாமிநாதன், ஷங்கர், ஸ்ரீது, கிருஷ்ணகுமார், துரைமுருகன், கணபதி. 

பெண்கள் அணி: அர்ச்சனா, தனலட்சுமி, ஷாலினி, ஸ்ரீஜா, ரேவதி, நித்யா, கீர்த்தனா, ஆர்த்தி, திவ்யா, ஹர்ஷினி, ஆஷா, பிரியதர்ஷினி, கவீனா, கோபிகா, காருண்யா, பெரியதர்ஷினி, மஞ்சு.

மேலும் செய்திகள்