தென் மண்டல டேபிள் டென்னிஸ்: தமிழக அணி ‘சாம்பியன்’

தென் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2019-10-11 22:44 GMT
சென்னை,

ஏ.ஜி.அலுவலகங்களுக்கு இடையிலான தென் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதில் அணிகள் பிரிவில் தமிழ்நாடு 3-1 என்ற செட் கணக்கில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சுபாசும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை சுவேதா குமாரவேலும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு அக்கவுண்டன்ட் ஜெனரல் டி.ஜெய்சங்கர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

மேலும் செய்திகள்