பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.

Update: 2019-10-23 22:58 GMT
பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 7-21, 14-21 என்ற செட் கணக்கில் சோவ் டைன் சென்னிடம் (ஹாங்காங்) 55 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார். இதே போல் இந்தியாவின் காஷ்யப், சமீர் வர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

மேலும் செய்திகள்