இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதியில் தோல்வி
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது.
ஒடென்ஸ்,
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 22-20, 13-21, 16-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீன தைபே வீரர் சோய் டின் சென்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 62 நிமிடம் அரங்கேறியது.