ரஷிய குத்துச்சண்டை: இந்திய வீரர் பன்ஹாலுக்கு வெண்கலப்பதக்கம்
ரஷியாவில் நடந்த கவர்னர் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இ்ந்திய வீரர் அமித் பன்ஹால் (52 கிலோ) அரைஇறுதியில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஷகோபிடின் ஜோரோவை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார்.
ரஷியாவில் நடந்த கவர்னர் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இ்ந்திய வீரர் அமித் பன்ஹால் (52 கிலோ) அரைஇறுதியில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஷகோபிடின் ஜோரோவை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார். இதில் ஷகோபிடின் 5-0 என்ற கணக்கில் பன்ஹாலை வீழ்த்தினார். இதனால் 23 வயதான பன்ஹால் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.