ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் - மானிகா பத்ரா ஜோடி தோல்வி
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி - கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் - மானிகா பத்ரா ஜோடி தோல்வி அடைந்தது.
டோக்கியோ,
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு வழியாக 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவின் தைபேவின் லின் - செங் ஜோடியை இந்தியாவின் சரத் கமல் - மானிகா பத்ரா ஜோடி எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 11-8 11-6 11-5 11-4 என்ற செட் கணக்கில் சரத் கமல் - மானிகா பத்ரா ஜோடி தோல்வி அடைந்தது.