டோக்கியோ ஒலிம்பிக்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வி

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

Update: 2021-07-27 02:27 GMT
டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான  இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வியை சந்தித்தது. 

கலப்பு இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் சவுரவ் சவுத்ரி  இணை 7-வது  இடம் பிடித்ததால் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.  முதல் சுற்றில்  முதலிடம் பிடித்த நிலையில் 2-வது சுற்றில் இந்திய ஜோடி 7-வது இடம் பிடித்ததால் ஏமாற்றம் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்