உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவு: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி

இந்தியாவின் ஜோதி சுரேகா மற்றும் அபிஷேக் வர்மா ஜோடி தென் கொரியாவின் கிம் யுன்-ஹீ மற்றும் கிம் ஜாங்-ஹோவை 159-156 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

Update: 2021-09-23 09:46 GMT
அமெரிக்கா 
 
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் அமெரிக்காவின் யாங்க்டோன் நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது . 

இதில் இந்தியாவின் ஜோதி சுரேகா மற்றும் அபிஷேக் வர்மா ஜோடி  தென் கொரியாவின் கிம் யுன்-ஹீ மற்றும் கிம் ஜாங்-ஹோவை 159-156 என்ற கணக்கில் வீழ்த்தினர்.
இதன் மூலம் நாளை நடைபெறும் இறுதி போட்டிக்கு ஜோதி சுரேகா-அபிஷேக் வர்மா ஜோடி தகுதி பெற்றுள்ளனர். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இவர்கள்  கொலம்பியாவின் சாரா லோபஸ் மற்றும் டேனியல் முனோஸ் ஆகியோரை எதிர் கொள்ள உள்ளனர். 

மேலும் செய்திகள்