தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார் பங்கஜ் அத்வானி
தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு பங்கஜ் அத்வானி தகுதிபெற்றார்.
போபால்,
88வது தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்து வருகிறது.இதில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் உலக சாம்பியனான பங்கஜ் அத்வானி, கர்நாடகா வீரர் சந்தோசுக்கு எதிராக விளையாடினார்.
பல முறை உலக சாம்பியன் ஆன பங்கஜ் அத்வானி பல சர்வதேச தொடர்களையும், உலகின் முன்னணி ஸ்னூக்கர் போட்டியாளர்களையும் வீழ்த்தி உள்ளார். இதனால் தேசிய போட்டியின் தொடக்க சுற்றில் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கர்நாடகாவின் சந்தோஷ் இவருக்கு கடும் சவால் அளித்தார். இருப்பினும் முதலில் சிறிது தடுமாறிய பங்கஜ் அத்வானி பின்னர் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
பெண்களுக்கான முதல் சுற்றில் இஷிகா ஷா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் மத்தியப் பிரதேசத்தின் அமீ கமானி தமிழகத்தின் நீனா பிரவீனை வீழ்த்தி 4-1 (49-10, 34-01, 22-45, 14-37, 37-01) என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.