உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : வரலாறு படைத்தார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்

ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக நாட்டவரான லக்‌ஷயா சென்னுடன் மோதினார்.

Update: 2021-12-19 03:47 GMT
ஹூயெல்வா,

ஸ்பெயின் நாட்டின் ஹூயெல்வா நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில்  ஆடவர் ஒற்றையர்  அரையிறுதி போட்டியில்  இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக நாட்டவரான ,லக்‌ஷயா சென்னுடன் மோதினார். 

இந்த ஆட்டத்தில்  17-21 என முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த் பின்னர் தனது  சிறப்பான  ஆட்டத்தினால்  இரண்டு, மூன்றாவது செட்களைக் கைப்பற்றினார். 

இதனால் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் இறுதிப்போட்டிக்கு  சென்ற முதல் இந்தியர் ஸ்ரீகாந்த் என்ற பெருமையை பெற்றார்

மேலும் செய்திகள்