உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : வரலாறு படைத்தார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்
ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக நாட்டவரான லக்ஷயா சென்னுடன் மோதினார்.
ஹூயெல்வா,
ஸ்பெயின் நாட்டின் ஹூயெல்வா நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக நாட்டவரான ,லக்ஷயா சென்னுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 17-21 என முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தினால் இரண்டு, மூன்றாவது செட்களைக் கைப்பற்றினார்.
இதனால் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் இறுதிப்போட்டிக்கு சென்ற முதல் இந்தியர் ஸ்ரீகாந்த் என்ற பெருமையை பெற்றார்