புரோ கபடி லீக்: அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் நாளை மோதல்

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Update: 2022-02-22 16:13 GMT
கோப்புப்படம்
பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் எலிமினேட்டர் சுற்றுகள் நேற்று முடிவடைந்தன.

இதில் பாட்னா பைரேட்ஸ், யுபி யோத்தா, தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகியவை அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. இந்த நிலையில், நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதையடுத்து நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கும்.

மேலும் செய்திகள்