தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன்: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நேற்று தொடங்கியது.

Update: 2022-05-08 23:24 GMT
image courtesy: BAI via ANI
பாங்காக், 

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நேற்று தொடங்கியது. இதில் தாமஸ் கோப்பை போட்டியில் 16 ஆண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் ஜெர்மனியை பந்தாடியது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-16, 21-13 என்றநேர் செட்டில் ஜெர்மனியின் வெய்ஸ்கிர் செனை எளிதில் தோற்கடித்தார். 

இதேபோல் ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனாய், இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜூன்- துருவ் கபிலா ஆகிய இந்தியர்களும் வெற்றியை தேடித்தந்தனர். 

பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டியில் டி பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது தொடக்க லீக் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொண்டது. இதில் ஒற்றையரில் பி.வி.சிந்து, ஆகார்ஷி காஷ்யப், அஷ்மிதா சாலிஹா, இரட்டையரில் தனிஷா- திரிஷாஜாலி ஆகியோரது அபார ஆட்டத்தின் உதவியுடன் இந்தியா 4-1 என்றகணக்கில் கனடாவை வீழ்த்தியது.

மேலும் செய்திகள்