என்னை நம்பிய முதல் ஸ்டார் அஜித் - வெங்கட் பிரபு

அஜித் மற்றும் ‘மங்காத்தா 2’ குறித்த கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு பதில் அளித்துள்ளார்.;

Update:2025-04-13 18:32 IST

சென்னை,

'சென்னை 28, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சரோஜா, கோவா, மாநாடு, மங்காத்தா, கோட்' உள்ளிட்ட பல படங்களை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். அஜித், விஜய் இருவரையும் இயக்கியதைப் போலவே இருவரின் படங்களில் நடித்தும் இருக்கிறார் வெங்கட் பிரபு. சமுத்திரக்கனி இயக்கிய `உன்னைச் சரணடைந்தேன்' படத்தில் வெங்கட் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். பயணங்கள் முடிவதில்லை, ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளார்.

விஜய்யின் கோட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் ரஜினியைச் சந்தித்து கதை கூறியுள்ளதாக தகவல் வெளியானது.

சமீபத்தில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் வெங்கட்பிரபு. அதில் அஜித் மற்றும் 'மங்காத்தா 2' குறித்த கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு, "'மங்காத்தா 2' படம் குறித்து தெரியவில்லை. ஆனால், அப்படத்தின் மீது அனைவருக்கும் ஆசை இருக்கிறது. அதன் 2-ம் பாகம் பண்ணலாமா அல்லது வேறு படம் பண்ணலாமா என்று தெரியவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் போது, வேறு எந்தப் படமும் ஓடாத போது அஜித் சார் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார் என்றார். அதே போல்தான் நானும் 'சென்னை 28', 'சரோஜா' மற்றும் 'கோவா' என 3 படங்கள் பசங்களை வைத்துதான் இயக்கியிருந்தேன். அந்த சமயத்தில் என்னை அழைத்தும் வாய்ப்பு கொடுத்தது அஜித் .

என்னை நம்பிய முதல் ஸ்டார், சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், தல, ஏ.கே மட்டுமே. என்னை நம்பிய முதல் ஹீரோ அவர் . அவர் எப்படி தேர்ந்தெடுப்பார் என்பது எல்லாம் தெரியாது. 'சென்னை 28' முடிந்த பின்பே என்னை 2-3 தயாரிப்பாளர்களிடம் அனுப்பினார்கள். ஆனால், ஏதோ காரணங்களால் அது நடக்கவில்லை. எல்லாரும் போல நானும் வெயிட்டிங்'" என்று தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான 'மங்காத்தா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணையவில்லை. சமீபமாக அஜித் - வெங்கட்பிரபு இணைந்து படம் பண்ண இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்