``அவர்களின் குட்புக்கில் இல்லையென்றால்..’’- தயாரிப்பாளர் தனஞ்செயன் பரபரப்பு கருத்து
ஜனநாயகன், பராசக்தி ஹேஷ்டேக் உடன் தயாரிப்பாளர் தனஞ்செயன் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
’ஜனநாயகன்’, ’பராசக்தி’ படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், பராசக்தி படத்தில் 25 இடங்களில் வசனங்களை மியூட் செய்து, காட்சிகளை கட் செய்த பிறகே யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜனநாயகன் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இன்று இதற்கான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கு 21-ம் தேதிக்கு தள்ளிப்போனது. பொங்கலுக்காவது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு தள்ளிப்போனதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயகன், பராசக்தி ஹேஷ்டேக் உடன் தயாரிப்பாளர் தனஞ்செயன் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.