திருமணத்திற்குப் பிறகு குவியும் வாய்ப்பு...4 புதிய படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

திருமணத்திற்குப் பிறகு கீர்த்தி நடிக்கும் புதிய படங்களில் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.;

Update:2025-11-07 15:03 IST

சென்னை,

நடிகை கீர்த்தி சுரேஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு, மீண்டும் முழு வீச்சில் நடிக்கத் தொடங்கியுள்ளார். பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது தமிழ் ,தெலுங்கு, இந்தி, மற்றும் மலையாளம் ஆகிய துறைகளில் இருந்து வாய்ப்புகள் குவிவதால் அவர் எப்போதும் இல்லாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.

கீர்த்தி ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிக்கும் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் “ரவுடி ஜனார்தன்” படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார், மேலும் சமீபத்தில் “தோட்டம்” என்ற மற்றொரு படத்தை அறிவித்தார்.

கூடுதலாக, அவர் ஒரு தமிழ் படத்திலும் மற்றொரு பாலிவுட் படத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதன் மூலம் திருமணத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் புதிய படங்களில் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்