’இந்த 3 விஷயங்களுக்கு எல்லோரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் ’ - தீபிகா படுகோன்
"ஸ்பிரிட்" படத்திலிருந்து விலகிய தீபிகா படுகோன், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.;
சென்னை,
8 மணி நேர வேலை காரணமாக சந்தீப் ரெட்டி வாங்கவின் "ஸ்பிரிட்" படத்திலிருந்து விலகிய தீபிகா படுகோன், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு புதிய நேர்காணலில் தீபிகா ,திரைப்படத் துறையிலும் 8 மணி நேர வேலையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். வாழ்க்கையில் அனைவரும் தூக்கம், உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு ஆகிய மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தற்போது, தீபிகா படுகோன் இரண்டு பெரிய படங்களில் நடித்து வருகிறார்: ஷாருக்கானின் "கிங்" மற்றும் அல்லு அர்ஜுன் - அட்லியின் எஎ22xஎ6(AA22xA6).