கும்கி 2.. படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குமா? அவசர வழக்காக இன்று விசாரிக்கிறது ஐகோர்ட்டு

இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.;

Update:2025-11-14 13:53 IST

சென்னை,

நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்ற திரைப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்கி- 2 என்ற திரைப்படத்தை பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக இருந்தது.

ஆனால், இந்த படத்தை தயாரிக்க கடந்த 2018-ம் ஆண்டு வாங்கி ரூ.2 கோடியே 50 லட்சத்தை பிரபு சாலமன் திருப்பித் தரவில்லை என்றும் அதனால் கும்கி 2 திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், படத்தை வெளியிட டிசம்பர் 3-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த தடையை நீக்க கோரி பிரபு சாலமன் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று இன்று காலையில் நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை கடைசி வழக்காக விசாரிப்பதாக உத்தரவிட்டார். இதன்படி இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்