டெல்லியில் வாக்களித்த பாஜக தலைவர்கள் பீகாரிலும் வாக்களித்துள்ளனர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.;

Update:2025-11-07 14:48 IST

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், 2ம் கட்ட தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் அம்மாநிலத்தின் பன்கா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, அரியானா சட்டசபை தேர்தலில் வாக்குத்திருட்டு நடைபெற்றதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கொடுத்துள்ளது. ஆனால், வாக்குத்திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை.

கடந்த ஆண்டு நடந்த அரியானா சட்டசபை தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் போலியானவை. பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்தது.இதனால் பாஜக வெற்றிபெற்றது. டெல்லியில் வாக்களித்த பாஜக தலைவர்கள் நேற்று பீகார் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர்

அரியானாவில் மொத்தமுள்ள 2 கோடி வாக்காளர்களில் 29 வாக்காளர்கள் போலியானவர்கள். அரியானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபட்டது. அதே வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பாஜக முயற்சிக்கிறது. பீகார் மக்கள் அதை அனுமதிக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.  

Tags:    

மேலும் செய்திகள்