கெஜ்ரிவால் நாளை பஞ்சாப் பயணம்; வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்

பஞ்சாபிற்கு உதவிடும் வகையில், கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் வழங்குவார்கள் என்று கெஜ்ரிவால் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.;

Update:2025-09-03 15:13 IST

சண்டிகார்,

வடமாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பரவலாக பருவமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், பஞ்சாபில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் மற்றும் மாநில பொறுப்பு தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகிய 3 பேரும் பஞ்சாப் பக்கமே போகவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், கெஜ்ரிவால், பஞ்சாப் மாநிலத்திற்கு நாளை சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் செல்கிறார். வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அதற்கு முன், டெல்லி பிரிவு தலைவரான சவுரப் பரத்வாஜ், நிவாரண பொருட்களுடன் பஞ்சாப் செல்வார் என கெஜ்ரிவால் இன்று கூறினார்.

ஒவ்வொரு நாளும் ஆம் ஆத்மியின் தலைவர்களும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் மற்றும் டெல்லி மக்களும் நிவாரண பொருட்களுடன் பஞ்சாபிற்கு செல்கின்றனர். ஒட்டுமொத்த நாடும் பஞ்சாபுடன் இன்று துணை நிற்கிறது என அவர் கூறினார்.

பஞ்சாபிற்கு உதவிடும் வகையில், கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் வழங்குவார்கள் என்று கெஜ்ரிவால் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்