எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு - அமளி: நாடாளுமன்றம் 5-வது நாளாக முடங்கியது

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.;

Update:2025-07-25 15:48 IST

புதுடெல்லி,

சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு இதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.

இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 21-ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நாடாளுமன்ற முடக்கம் இன்றும் 5-வது நாளாக நீடித்தது. அந்தவகையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று பகல் 11 மணிக்கு மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் பீகார் மாநில சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை கிளப்பினார்கள். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

கடும் கூச்சல் நிலவியதால் சபை 2 தடவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இன்று நாள் முழுக்க மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. திங்கள் கிழமை மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்