காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் இருந்து 2 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்தனர்.;
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதி அமைந்துள்ளது. அம்மாவட்டத்தின் மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுகோடு பகுதியில் நேற்று இரவு பாதுகாப்புப்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தானில் இருந்து 2 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்தனர். இதை கண்ட பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
உடனடியாக பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்புப்படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், என்கவுன்டர் நடந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.