உத்தரபிரதேசத்தில் 12 மணி நேர வேலையை அனுமதிக்கும் புதிய சட்டம் அமல்

பெண் தொழிலாளர்களின் சுய ஒப்புதலுடன் அவர்கள் இரவு பணிகளில் ஈடுபட அனுமதிக்கிறது.;

Update:2025-11-05 21:43 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் தொழிற்சாலைகள் திருத்த சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்ட விதிகள் குறித்து மாநில அரசு விளக்கம் அளித்தது. அதில், கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* புதிய விதிகளின் கீழ், தொழிற்சாலைகளில் அதிகபட்ச தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீட்டிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் மொத்த வாராந்திர வேலை 48 மணி நேரத்தை தாண்டக்கூடாது.

Advertising
Advertising

* தொழிலாளர்கள் எழுத்துப்பூர்வ ஒப்புதலுக்கு உட்பட்டு, இடைவெளி இல்லாமல் 6 மணி நேரம் வரை தொடர்ந்து வேலை செய்ய இந்த சட்ட விதி அனுமதிக்கிறது.

* பெண் தொழிலாளர்களின் சுய ஒப்புதலுடன் அவர்கள் இரவு பணிகளில் ஈடுபட அனுமதிக்கிறது.

* பரிந்துரைக்கப்பட்ட தினசரி வரம்பை தாண்டி கடமைகளை செய்யும் தொழிலாளர்கள் இரு மடங்கு கூடுதல் நேர ஊதியத்தை பெற உரிமை பெறுவார்கள்.

இந்த திருத்தம் உத்தரபிரதேசத்தை தொழில்துறை வளர்ச்சியில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைவதற்கான மாநிலத்தின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும் என்றும் முதன்மை செயலாளர் (தொழிலாளர்) அதுல் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்