இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க....நாய் கடித்த பின் செய்ய வேண்டியது என்ன ?

நாய் கடித்த பின் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.;

Update:2025-09-16 08:36 IST

புதுடெல்லி,

நாடு முழுவதும் நாய்க்கடி பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தலைநகர் டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கவும், கருத்தடை ஊசி போடவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விட வேண்டும் எனவும், ஆக்ரோஷமான, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடாமல் காப்பகத்தில் தனியாக அடைத்து வைக்க வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், நாய் கடித்த பின் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

*நாய் கடித்த உடன் அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை சென்று அணுக வேண்டும்.

*நாய் கடித்த காயத்தை உடனடியாக சோப்பு மற்றும் சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

*வீட்டு கிருமி நாசினியை பயன்படுத்தி நாய் கடித்த இடத்தை கழுவ வேண்டும்.

*செல்லப் பிராணிகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும்

*நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்த வேண்டும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்