121-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.;

Update:2025-09-27 09:25 IST

சென்னை,

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது உருவச் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலை அருகே அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து, தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டிவி, கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் கடந்த 2019-ம் ஆண்டு அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டும் வருகிறது. இந்த ஆண்டும் அரசு சார்பில் சி.பா.ஆதித்தனார் சிலை, உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்