திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

சுத்தமல்லி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.;

Update:2025-06-18 16:28 IST

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட கோடகநல்லூரைச் சேர்ந்த அசோக் (வயது 24) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 1/2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அசோக்கை சுத்தமல்லி போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று (17.6.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்