பாஜக யாரையும் எதிரி கட்சியாக நினைக்கவில்லை - நயினார் நாகேந்திரன்

அனைவரும் ஒரு அணியில் இணைய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-15 14:44 IST

திருநெல்வேலி,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளாக மோசமான அரசாக செயல்படுகிறது. கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை அரசாக செயல்படுகிறது. இந்த அரசு விலக்கப்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒரு அணியில் இணைய வேண்டும். எம்ஜிஆர் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஆட்சி மாற்றத்திற்கு உதவ வேண்டும்.

பாஜ யாரையும் எதிரி கட்சியாக நினைக்கவில்லை. எதிர்க்கட்சியாக தான் நினைக்கிறோம். தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். அது உள்கட்சி பிரச்சினை அதை நான் பேச விருப்பமில்லை. ஓபிஎஸ் இடம் நான் பேசி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்