ஐதராபாத்தில் இருந்து சேலம், திருப்பூர் வழியாக கொல்லம் செல்லும் ரெயில் சேவை நீட்டிப்பு
சிறப்பு ரெயில் சேவையானது அக்டோபர் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.;
திருப்பூர்,
ஐதராபாத்திலிருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு சனிக்கிழமை தோறும் இரவு 11.10 மணிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 07193) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்சேவையானது வருகிற அக்டோபர் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கொல்லத்திலிருந்து திங்கட்கிழமைதோறும் காலை 10.45 மணிக்கு இயக்கப்படும் ரெயிலும் அக்டோபர் 13-ந்்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்களானது செகந்திரபார், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.