கரூர் சம்பவம்: மருத்துவமனையில் இருந்து அனைவரும் வீடு திரும்பினர்

கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-10-04 20:48 IST

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற தவெக தலைவர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் உடல்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களுடைய குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில் கூட்ட நெரிசலில் காயமடைந்த 110 பேரில், 51 பேர் குணமடைந்து அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 59 பேரில், 51 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் உள்ள 59 பேருக்கும் உயர்சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் (59 பேரும்), குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருச்சியில் 2 பேர், மதுரையில் 2 பேர் என மொத்தம் 4 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேரும் விரைவில் குணமடைய உயரிய சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்