பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் தாம்பரம், பல்லாவரம், தரமணி ஆகிய பகுதிகளில் மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.;
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை மறுநாள் (23.06.2025, திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், பல்லாவரம், தரமணி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
தாம்பரம்: எம்இஎஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை, காந்தி சாலை, ரங்கநாதபுரம், இரும்புலியூர் சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், TTK நகர், ஜெருசீலம் நகர், சர்ச் சாலை, ரத்தினகுமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ்.ராஜன் நகர், ஜி.கே.மூப்பனார் அவென்யூ, சித்தலபாக்கம் ஜோதி நகர், ஜோதி நகர், சித்தலபாக்கம் சாலை, ராமசந்திரா சாலை, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, அய்யாசாமி தெரு.
பல்லாவரம்: கடப்பேரி பச்சைமலை ஹவுசிங் போர்டு, டிபி மருத்துவமனை, ஜிஎஸ்டி சாலை, ஜி.எச்., நியூ காலனி 13 முதல் 14, 17வது குறுக்குத் தெரு, மல்லிகா நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, கட்டபொம்மன் நகர், ஆர்.கே.வி.அவென்யூ, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் சாலை, பங்காரு நகர்.
தரமணி: அதிபதி மருத்துவமனை, சிடிஎஸ் பிளாட், கிரியாஸ் அருகில், தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி தெரு, பேபி நகர் பகுதி, சாஷாத்திரிபுரம், பார்க் அவென்யூ ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.