கடல் மாநாடு: படகில் சென்று பார்வையிட்ட சீமான்

ஏற்கனவே மரங்கள் மாநாடு, கால்நடை மாநாடு நடத்தியுள்ள நிலையில், தற்போது சீமான் கடல் மாநாடு நடத்த உள்ளார்.;

Update:2025-10-04 11:03 IST

தூத்துக்குடி,

கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிம் ஆடு, மாடுகள் மாநாடுகளை தொடர்ந்து அடுத்தகட்ட மாநாடு என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சீமான் கூறியதாவது:- “அடுத்ததாக மலைகளின் மாநாடு தர்மபுரியில் நடத்துகிறோம். அதன்பிறகு தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு நடத்தப்போகிறோம். ஐம்பூதங்கள் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் இருக்காது” என அவர் கூறினார்.

ஏற்கனவே சீமான் மரங்கள் மாநாடு, கால்நடை மாநாடு நடத்தியுள்ள நிலையில், தற்போது கடல் மாநாடு நடத்த உள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் அமளி நகர் மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடி படகு மூலம் மீனவர்களுடன் கடலுக்குள் சீனாம் சென்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்