மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில் கோட்டங்களுக்கு உட்பட்ட உப மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், சங்கரன்கோவில் கோட்டங்களுக்கு உட்பட்ட உப மின் நிலையங்களில் நாளை (19.6.2025, வியாழக்கிழமை) மின்வாரிய மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் உப மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (19.6.2025, வியாழன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வரும் இடங்களில், பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் இருக்காது.
அதன்படி தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானை கோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் நாளை (19.6.2025, வியாழன் கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி ஆகிய இடங்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.