சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் நாளை (08.03.2025) காலை 09:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை 110/கி.வோ அலமாதி துணைமின் நிலையத்தில் கோடைகால மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கூடுதலாக ஒரு 10 எம்.வி.ஏ மின்மாற்றி நிறுவும் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 4:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருமுல்லைவாயல்/அலமாதி: திருவள்ளூர் நெடுஞ்சாலை, குருவாயல், அகரம், பூச்சி அத்திபேடு, மோரை, வெள்ளானூர், புதுகுப்பம், அயலச்சேரி, எறுமைவெட்டி பாளையம், கிழ்கொண்டையுர், அரக்கம் கிராமம், கர்லபாக்கம் கிராமம், தாமரைபாக்கம் கிராமம், கதவூர் கிராமம், வேளச்சேரி கிராமம், பாண்டேஸ்வரம் கிராமம், காரனை கிராமம், புதுகுப்பம் கிராமம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி கிராமம், குருவாயில் கிராமம், பூச்சியத்திபேடு, கொடுவள்ளி கிராமம், ரெட்ஹில்ஸ் சாலை, பால் பண்ணை சாலை, வேல் டெக் சாலை, கொள்ளு மேடு சாலை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.