மறுசீரமைப்பு பணி: ஆமதாபாத்-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை எழும்பூர் யார்டு பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது.;
திருச்சி,
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட சென்னை எழும்பூர் யார்டு பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி ஆமதாபாத்-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் ஆமதாபாத்-திருச்சி சிறப்பு ரெயில் (வண்டி எண் 09419) வருகிற 18-ந் தேதி மற்றும் 25-ந் தேதி, அக்டோபர் மாதம் 2, 9, 16, 23, 30-ந் தேதிகள் மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் ஆமதாபாத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ரேனிகுண்டா, திருத்தணி, மேலப்பாக்கம், காட்பாடி ஜங்ஷன், வேலூர் கண்டோன்மெண்ட் வழியாக திருச்சிக்கு வந்தடையும்.
இதேபோல் திருச்சி-ஆமதாபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண் 09420) வருகிற 21, 28-ந் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 5, 12, 19, 26-ந் தேதிகள் மற்றும் நவம்பர் மாதம் 2, 9-ந் தேதிகளில் வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி ஜங்ஷன், மேலப்பாக்கம், திருத்தணி, ரேனிகுண்டா வழியாக ஆமதாபாத் செல்லும். இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.