குடியரசு தினம்: தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
இந்திய நாட்டின் குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.;
இந்திய நாட்டின் குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரக்கூடிய சூட்கேஸ், பேக் மற்றும் பொருள்களையும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். மேலும் ரெயில் முழுவதும், பார்சல் அலுவலகத்தையும், ரெயில் நிலையத்திற்கு வரும் வாகனங்களையும் போலீசார் சோதனை செய்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.