பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சீமான் மனு
புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாஸ்போர்ட் மாயமாகி விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் ஆகியோர் அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கின் விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.