சேவை குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6,21,904 வழங்க உத்தரவு

தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஒருவர், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அந்த பாலிசியில் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து காப்பீடு செய்துள்ளார்.;

Update:2025-09-30 22:47 IST

தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் எழிலரசி என்பவர் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். இந்த பாலிசியில் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து காப்பீடு செய்துள்ளார். இவரது கணவர் அரியநாயகம், தனக்கு இருதயத்தில் வலி ஏற்பட்டதால் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பின்னர் தனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அதன் பின்னர் இந்த பணத்தை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது. மேலும் அவரது காப்பீட்டையும் ரத்து செய்துள்ளது.

இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ரத்து செய்யப்பட்ட பாலிசியை மீண்டும் புதுப்பித்து வழங்க வேண்டுமென்றும், சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட மருத்துவ செலவுத் தொகை ரூ.5,61,904 சேவை குறைபாடு மற்றும் LD GOT உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.50,000 வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.6,21,904 ஐ 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்