தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 22 போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 22 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர உதவியாக இருந்தும், சைபர் குற்ற வழக்குகளில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடி பணத்தை மீட்டும் மற்றும் CCTNSல் சிறப்பாக பணிபுரிந்தும் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 22 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று (7.8.2025) மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.