விபத்தில் காயமடைந்த தென்காசி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த தென்காசி போலீஸ் ஏட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update:2025-01-17 09:43 IST

தென்காசி,

தென்காசி ஆபாத் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலி (வயது 40). கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய இவர் பின்னர் மாவட்ட போலீஸ் தனிப்படை பிரிவில் வேலை செய்தார்.

இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி இரவில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் செய்யது அலி பலத்த காயமடைந்தார். அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான தென்காசிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கூடுதல் சூப்பிரண்டு வேணுகோபால், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ் இனியன் மற்றும் போலீசார், குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் அடக்க தலத்தில், போலீசார் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் செய்யது அலி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்