3 புதிய சப்-டிவிஷன்,10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: 22-ம் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் புதிய சப்-டிவிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் வரும் 22ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
அதன்விவரம்:-
புதிய உட்கோட்டங்கள்:-
- காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர்
- நாகை மாவட்டம் - வேளாங்கண்ணி
- நாமக்கல் மாவட்டம் - பள்ளிப்பாளையம்
புதிய காவல் நிலையங்கள்:-
- நாமக்கல் மாவட்டம்- கொக்கராயன் பேட்டை
- தர்மபுரி மாவட்டம் - புளிக்கரை
- சிவகங்கை மாவட்டம் - கீழடி
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - களமருதூர்
- திருவண்ணாமலை மாவட்டம்- திருவண்ணாமலை கோவில் காவல் நிலையம்
- மதுரை மாநகரம் - சிந்தாமணி
- மதுரை மாநகரம் - மாடகுளம்
- கோயமுத்தூர் மாவட்டம் - நீலாம்பூர்
- நெல்லை மாநகர் - மேலவாசல்
- திருப்பூர் மாவட்டம் - பொங்கலூர்