3 புதிய சப்-டிவிஷன்,10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: 22-ம் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் புதிய சப்-டிவிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-17 11:52 IST

சென்னை,

தமிழ்நாடு காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் வரும் 22ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

அதன்விவரம்:-

புதிய உட்கோட்டங்கள்:-

  1. காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர்
  2. நாகை மாவட்டம் - வேளாங்கண்ணி
  3. நாமக்கல் மாவட்டம் - பள்ளிப்பாளையம்

புதிய காவல் நிலையங்கள்:-

  1. நாமக்கல் மாவட்டம்- கொக்கராயன் பேட்டை
  2. தர்மபுரி மாவட்டம் - புளிக்கரை
  3. சிவகங்கை மாவட்டம் - கீழடி
  4. கள்ளக்குறிச்சி மாவட்டம் - களமருதூர்
  5. திருவண்ணாமலை மாவட்டம்- திருவண்ணாமலை கோவில் காவல் நிலையம்
  6. மதுரை மாநகரம் - சிந்தாமணி
  7. மதுரை மாநகரம் - மாடகுளம்
  8. கோயமுத்தூர் மாவட்டம் - நீலாம்பூர்
  9. நெல்லை மாநகர் - மேலவாசல்
  10. திருப்பூர் மாவட்டம் - பொங்கலூர்
Tags:    

மேலும் செய்திகள்