திருநெல்வேலி: கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.;
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு கொலை வழக்கில் ஈடுபட்ட சுத்தமல்லியை சேர்ந்த பார்த்திபன் (வயது 25) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு 2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் பார்த்திபனுக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பார்த்திபனை சுத்தமல்லி போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.