இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கோப்புப்படம்
6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளை சீரழித்தது மட்டும்தான் திமுகவின் சாதனை: அன்புமணி காட்டம்
அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட 15-ந்தேதி முதல் விருப்ப மனு விநியோகம்
15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியாரின் கவிதைகள் துணிவைத் தூண்டின: பிரதமர் மோடி தமிழில் புகழாரம்
தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் பாரதியார் ஆற்றிய பங்களிப்புகள் ஒப்பிலாதவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத்துக்கு விரைவில் நேரடி விமான சேவை
தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத்துக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.
ஊட்டியில் பழங்குடியின பெண்னை அடித்துக்கொன்ற புலி கூண்டில் சிக்கியது
30-க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுவைத்து ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் கண்காணித்தனர்.
சற்று உயர்ந்த தங்கம் விலை.. ஏறுமுகத்தில் வெள்ளிவிலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,050-க்கும், சவரன் ரூ.96,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம் - மத்திய மந்திரி தகவல்
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.