இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
டெலிவரி ஊழியர்களின் நலனுக்காக ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதைசாலையில் சென்ற கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மியான்மர் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தோர் எண்ணிக்கை 3,900ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் அதிகபட்சமாக கரூர் பரமத்தி பகுதியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கும்பமேளாவில் வைரலான பெண்ணுக்கு கதாநாயகி வாய்ப்பு வழங்கிய இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் எஸ்.பி.ஐ வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்பவர் தனது 66 வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்து ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
பண்ருட்டி அருகே வாகனங்களை வழிமறித்து கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபடுவதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லியில் ரூ.27.4 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மதுபாட்டில்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.