இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
x
தினத்தந்தி 31 March 2025 8:58 AM IST (Updated: 1 April 2025 10:11 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 31 March 2025 7:46 PM IST

    டெலிவரி ஊழியர்களின் நலனுக்காக ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

  • 31 March 2025 7:45 PM IST

    குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதைசாலையில் சென்ற கார் திடீரென தீ பற்றி எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  • 31 March 2025 7:07 PM IST

    மியான்மர் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தோர் எண்ணிக்கை 3,900ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 31 March 2025 7:06 PM IST

    தமிழ்நாட்டின் அதிகபட்சமாக கரூர் பரமத்தி பகுதியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

  • 31 March 2025 7:06 PM IST

    கும்பமேளாவில் வைரலான பெண்ணுக்கு கதாநாயகி வாய்ப்பு வழங்கிய இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • 31 March 2025 7:06 PM IST

    கர்நாடகாவில் எஸ்.பி.ஐ வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • 31 March 2025 6:44 PM IST

    ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்பவர் தனது 66 வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்து ஆச்சரியப்பட வைத்துள்ளார். 

  • 31 March 2025 6:44 PM IST

    பண்ருட்டி அருகே வாகனங்களை வழிமறித்து கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபடுவதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  • 31 March 2025 6:41 PM IST

    டெல்லியில் ரூ.27.4 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • 31 March 2025 6:02 PM IST

    புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மதுபாட்டில்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 More update

Next Story