அழகான பெண்களின் புகைப்படத்தை அனுப்பி வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை.. அடுத்து நடந்த சம்பவம்

செல்போன் செயலியில் அழகான பெண்களிடம் புகைப்படத்தை அனுப்பி வாலிபரை திருநங்கை உல்லாசத்துக்கு அழைத்தார்.;

Update:2025-10-12 07:34 IST

வளசரவாக்கம்,

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 21). இவர், சென்னை கொரட்டூர் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டார். இதற்காக செல்போன் செயலி மூலம் அழகான பெண்களை தேடினார்.

அப்போது அதில் அஸ்விதா என்ற பெயரில் பெண் ஒருவர் தனது அழகான புகைப்படத்தை அனுப்பி உல்லாசத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை பார்த்த உதயகுமார், அதில் குறிப்பிட்டு இருந்த வளசரவாக்கம், முரளி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

அந்த வீட்டில் அஸ்விதா என்ற பெயரில் அழகான பெண் இருப்பார் என நினைத்து சென்ற உதயகுமார், திருநங்கை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருநங்கை அஸ்விதா மற்றும் அவருடன் இருந்த வாலிபர் என இருவரும் சேர்ந்து உதயகுமாரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.

இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி அவரை விரட்டியடித்தனர். இதுபற்றி உதயகுமார் அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கையான முஸ்தபா என்ற அஸ்விதா (30) மற்றும் அவரது நண்பர் தினேஷ்குமார் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் அவரது நண்பர் உதவியுடன் செல்போன் செயலி மூலம் அழகான பெண்களின் புகைப்படத்தை அனுப்பி வாலிபர்களை உல்லாசத்துக்கு அழைத்து நகை, பணம், செல்போன், மோட்டார்சைக்கிள் உள்ளிட்டவைகளை பறித்து வந்துள்ளனர். இவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தெரிந்தால் அவமானம் என போலீசில் புகார் செய்யவில்லை. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தொடர்ந்து இதுபோல் வாலிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

கைதான 2 பேரிடம் இருந்தும் ரூ.95 ஆயிரம், 11 செல்போன்கள், ஒரு கத்தி, 4 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களது நண்பரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்