இந்தி திணிப்புக்கு எதிரான போரில் மக்கள் ஆதரவோடு வென்று காட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்

தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமாக தொடர்கிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்;

Update:2025-04-20 17:17 IST

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஆதிக்க சக்திகளின் இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத்தலைவர் முதல்-அமைச்சர் என நம் தலைவர்கள் தலைமையில் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறோம்.

இது வெறும் மொழிப் போராட்டமாக மட்டுமல்லாமல்; தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமாகவும் தொடர்கிறது.

நூற்றாண்டு காணபோகும் இந்தித் திணிப்புக்கு எதிரான இந்தப் போரில் மக்கள் ஆதரவோடும், சட்டத்தின் துணைக்கொண்டும் நம் கழகத்தலைவர்,முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வென்று காட்டுவோம். என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்