உ.பி.யில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

சமாஜ் வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களை பற்றி சிந்திக்கவில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-17 10:24 GMT

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியில் சமாஜ் வாதி கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

சமாஜ் வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களை பற்றி சிந்திக்கவில்லை. மக்கள் இடங்களை மதிப்பீடு செய்ய தொடங்கியபோது காங்கிரசுக்கு இவ்வளவு சீட் ஏன் கொடுத்தீர்கள் என்றார்கள்? கூட்டணியில் வரவேண்டும் என்பதனால் காங்கிரசுக்கு 17 இடங்கள் கொடுத்துள்ளேன்.

உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என்று நம்புகிறேன். பா.ஜ.க.வினர் 400க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற போவதில்லை. தோற்கப் போகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும் என கனவு காண்பவர்களை 400 இடங்களில் தோற்கடிக்க செய்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்